பாணந்துறை கடற்பரப்பில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட அறுவர்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
#Panadura
#Sea
Thamilini
1 year ago
பாணந்துறை கடற்கரையில் நீராடச் சென்ற 6 பேர், வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்ட போது, பாணந்துறை பொலிஸ் உயிர்காப்புப் பிரிவின் அதிகாரிகள் இருவரினால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
16 வயதுக்கும் 21 வயதுக்கும் இடைப்பட்ட மூன்று சிறுவர்களும் மூன்று சிறுமிகளுமே இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளனர்.
பாணந்துறை பொலிஸ் உயிர்காப்பு பிரிவைச் சேர்ந்த 69951 புஸ்பகுமார மற்றும் 93731 தேஷான் ஆகிய இரு பொலிஸ் கான்ஸ்டபிள்களினால் இவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.