இலங்கையர்களுக்கு உலகின் பல நாடுகளில் கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்புகள்!
#SriLanka
#Job Vacancy
#Tamilnews
#sri lanka tamil news
#Germany
Thamilini
2 years ago
உலகின் பல நாடுகளில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்படவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
ஜேர்மன் தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனங்களில் பெற்றுக்கொண்ட தொழிற்கல்வி மூலம் குறித்த வேலைவாய்ப்புகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சபாநாயகருக்கும், ஜேர்மன் தூதுவர் பெலிக்ஸ் நியூமனுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்தப் பயிற்சி நிறுவனங்களின் மூலம் அதிக இளைஞர்கள் பயன் பெறும் வகையில் தொழில்நுட்பம் சார்ந்த புதிய பயிற்சி நெறிகளை உள்ளடக்க வேண்டியதன் தேவையை சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.