ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் மீது முட்டை மற்றும் கற்களை வீசி போராட்டம் நடத்திய விவசாயிகள்

#Parliament #Protest #people #Attack #Egg #European #Farmers
Prasu
2 years ago
ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் மீது முட்டை மற்றும் கற்களை வீசி போராட்டம் நடத்திய விவசாயிகள்

இன்று விவசாயிகள் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் மீது முட்டைகளையும் கற்களையும் வீசி எறிந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கட்டிடத்தின் அருகே தீவைத்தும், பட்டாசுகளை வெடித்தும் எதிர்ப்புக்களுக்கு மத்தியில் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களின் உச்சிமாநாட்டில் வரிகள் மற்றும் அதிகரித்து வரும் செலவினங்களுக்கு உதவுமாறு வலியுறுத்தினார்கள்.

உச்சிமாநாடு நடைபெறும் இடத்திலிருந்து சில தொகுதிகளுக்கு அப்பால் – பாராளுமன்றத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை போராட்டக்காரர்கள் உடைக்க முயன்றனர்,

ஆனால் பொலிசார் அவர்களை மீது கண்ணீர் புகை குண்டுகளையும் வீசி தடுத்துள்ளனர். நாடாளுமன்றத்திற்கு அருகில் விவசாயிகள் தங்கள் டிராக்டர்களுடன் கூடியிருந்த சதுக்கத்தில் இருந்த சிலை சேதப்படுத்தப்பட்டதாக உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் மதிப்பீட்டின்படி, ஐரோப்பிய ஒன்றியத்தின் இதயமான பிரஸ்ஸல்ஸில் உள்ள முக்கியப் பாதைகள் சுமார் 1,300 டிராக்டர்களால் தடுக்கப்பட்டன.

தங்களுக்கு போதிய ஊதியம் வழங்கப்படவில்லை என்றும், வரி மற்றும் பசுமை விதிகளால் திணறுவதாகவும், வெளிநாடுகளில் இருந்து நியாயமற்ற போட்டியை எதிர்கொள்வதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர்.

 இத்தாலி, ஸ்பெயின் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த விவசாயிகளும் போராட்டத்தில் பங்கேற்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4