இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த அரசு பல வழிகளில் முயல்கிறது. அவ்வகையில் வரிகளை புதுப்புது வர்ணம் தீட்டி அறவிட்டு வருகிறது.
அவ்வகையில் புதிதாக பலர் வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பிற்கு செல்வதாலும் நாட்டை விட்டு செல்வதாலும் பலர் கடவுச்சீட்டை பெறுகின்றனர்.
அதனால் அரசுக்கு பல கோடிகள் கிடைக்கப்பெறுகிறது. அதில் கண் வைத்த அதிகாரிகள் கடவுச்சீட்டு பெறும் கட்டணத்தை இரு மடங்காக மாற்றியுள்ளது.
இலங்கையில் கடவுச்சீட்டு விண்ணப்பங்களுக்கான கட்டணம் 5,000 ரூபாயாக இருந்தது இப்பொழுது 10,000 ரூபாவாக அறவிடப்படவுள்ளது என குடி வரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
சாதாரண கடவுச்சீட்டு சேவைகளுக்கான கட்டணங்கள் நாளை முதல் அதிகரிக்கப்படும் என இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
இக்கட்டணம் மேலும் விரைவில் அதிகரிக்கலாம் எனவும் உள்ளக செய்திகள் தெரிவிக்கின்றன.



