பெரசூட் ஒத்திகையின் போது விபத்து - நால்வர் மருத்துவமனையில் அனுமதி
#SriLanka
#Accident
#Hospital
#Independence
#Soldiers
#parachute
Prasu
2 years ago
சுதந்திர தின ஒத்திகையில் பங்கேற்ற பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 4 பேர் பெரசூட் ஒத்திகையின் போது கீழே விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பெரசூட் ஒத்திகையின் போது வானத்தில் இரண்டு பாரசூட்கள் மோதி விபத்துக்குள்ளானதாகவும், விபத்தில் விமானப்படையின் இரண்டு பெரசூட் வீரர்களும், இராணுவத்தின் இரண்டு பெரசூட் வீரர்களும் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்தின் போது கைடயக்க தொலைபேசியில் பதிவான காணொளி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.