யாழில் உருவாகும் புதிய இயக்கம். போதை ஒழிப்பே இவர்களது நோக்கமாம். என்ன செய்யப்போகிறார்கள்?

#SriLanka #Article #drugs #Lanka4
Lanka4
3 months ago
யாழில் உருவாகும் புதிய இயக்கம். போதை ஒழிப்பே இவர்களது நோக்கமாம். என்ன செய்யப்போகிறார்கள்?

யாழில் இருந்து ஒரு புதிய இயக்கத்தை சில இளைஞர்கள் ஆரம்பிக்க ஏற்பாடுகள் நடைபெறுவதாகவும். அதற்கான ஆள் சேர்ப்பு மாணவர்கள் மற்றும் உத்தியோகத்தர், வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்கள், கணிணி தொழில் நுட்பவியலாளர்கள் எனவும் இதற்குள் மறைமுகமாக சில நல்ல கைக்கூலி வாங்காத போலீஸ் அதிகாரியும் அடங்குகிறார்கள். அத்தோடு பாதிக்கப்பட்ட சில பெற்றோரும் இவர்களுக்கு உதவுவார்கள் எனவும் கூறப்படுகிறது. 

இவர்களுக்கு அபாயம்? இலங்கையில் போதைப் பொருள் வியாபாரத்தின் ஆணிவேராக இருப்பதும் உடந்தையாக இருப்பதும் பெரிய சில பண முதலைகளும், சில அரசியல்வாதிகளும், சில பாடசாலை ஆசிரியர், அதிபர்களும் சில சட்டத்தரணிகளும், சில பாதுகாப்பு உத்தியோகத்தரும் என்பது அனைவரும் அறிந்த விடயம்.

இவர்கள் இந்த இளைஞர்கள் இயக்கத்துக்கு இடையூறு அல்லது ஆபத்து விழைவிப்பார்கள் என்பது நிஜ உண்மை. போதைப் பொருள் விற்பனைக்கு பின்னால் ஒரு சில றவுடி கும்பல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. றவுடிகளை சட்ட ரீதியாக காப்பாற்றுவதும் இந்த போதைப் பொருள் கடத்தும் கும்பலை காப்பாற்றும் சட்டத்தரணிகளே. 

 எது எதுவாக இருந்தாலும் நாமும் இம் முயற்சிக்கு ஆதரவு வழங்குவோம் என மக்களும் பொது அமைப்புக்களும், சில வெளி நாட்டில் வாழும் உறவுகளும் கூறியிருப்பதாக அறியப்படுகிறது. போதை ஒழிப்பு என்பது ஒரு குருசேத்திரப் போர் ஆகும். இங்கே குற்றவாளிகளை விட நிரபராதிகளே அதிகம் பண பலத்தால் தண்டிக்கப்படுவது நடக்கும் எழுதப்படாத சட்டம். நடப்பது நல்லதாக நடந்தால் சிறப்பு.