நாடளாவிய ரீதியில் 803 சந்தேகநபர்கள் கைது!
#SriLanka
#Arrest
#Police
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட நீதி நடவடிக்கையின் கீழ் இன்று (28.01) காலை முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் 803 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையின் போது 212 கிராம் ஹெரோயின், 101 கிராம் ஐஸ் மற்றும் 169 மாத்திரைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதற்கு மேலதிகமாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 05 சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
போதைக்கு அடிமையானவர் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.



