மாமியும் மருமகளும் ஒற்றுமையாக இருந்தாலே குடும்பத்தில் தாம்பத்தியம் சிறக்கும் அதற்கு இது பரிகாரம்.

#Lanka4 #ஆன்மீகம் #குடும்பம் #லங்கா4 #மகிழ்ச்சி #Happy #family #Spirituality #lanka4Media #lanka4_news #லங்கா4 ஊடகம் #lanka4.com
Mugunthan Mugunthan
3 months ago
மாமியும் மருமகளும் ஒற்றுமையாக இருந்தாலே குடும்பத்தில் தாம்பத்தியம் சிறக்கும் அதற்கு இது பரிகாரம்.

கூட்டுக்குடும்பங்களில் பொதுவாக மாமியார்- மருமகளிடையே ஏற்படும் கருத்து மோதல்கள் அந்தக் குடும்பத்தில் கணவன் - மனைவி பிரச்சனையை ஏற்படுத்துகிறது.

 பல கணவன் - மனைவி பிரிவதற்கும் இது முக்கியமான காரணமாக உள்ளது. இவர்களுக்குள் ஏற்படும் பிரச்சனை, வாக்குவாதமே அந்த வீட்டின் அமைதியை கெடுத்து, வீட்டையே போர்க்களம் ஆக்கி விடுகிறது.

ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை, அலுவலக பிரச்சனைகளை தீர்ப்பதற்கு எப்படி வாஸ்து சாஸ்திரத்தில் இடம் உள்ளதோ அதே போல், வீட்டில் உள்ள உறவுகளுக்குள் ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்கவும் வாஸ்து சாஸ்திரத்தில் வழி உள்ளது. 

இப்படி மாமியார் - மருமகள் பிரச்சனை ஏற்பட்ட என்ன காரணம், அவற்றை தீர்க்க வீட்டில் எந்த விதமான மாற்றங்களை செய்யலாம் என்பதை இங்கு பார்க்கலாம். மனிதர்களின் வாழ்வில் பலவிதமான பிரச்சனைகள் இருந்து கொண்டே தான் இருக்கும். பணப் பிரச்சனை, அலுவலகப் பிரச்சனை ஆகியவற்றை விட வீட்டில் உள்ள உறவுகளுக்குள் ஏற்படும் பிரச்சனை, மனக்கசப்பு, சண்டை ஆகியவை தான் ஒருவரை அதிகம் நிலைகுலையச் செய்யும். 

images/content-image/1706343363.jpg

பல வீடுகளில் கணவன் - மனைவி பிரச்சனையை விட மாமியார் - மருமகள் பிரச்சனை தான் தீர்க்க முடியாத பிரச்சனையாக இருந்து வருகிறது. இதனால் யார் பக்கம் பேசுவது என தெரியாமல் கணவன்மார்கள் பலர் திண்டாடுவார்கள்.

 இனி வரும் காலங்களில் திருமண பொருத்தம் பார்க்கும் போது மணமகன் - மணமகளுக்கு பொருத்தம் உள்ளதா என்பதை பார்ப்பதை விட, மணமகனின் அம்மாவிற்கும், மருமகளுக்கும் ஒத்துப் போகுமா என்று தான் ஜாதகம் பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

 வீட்டில் உள்ள மற்ற பிரச்சனைகளை தீர்ப்பதற்கு எப்படி வாஸ்து சாஸ்திரம் வழி காட்டுகிறதோ அதே போல் உறவுகளுக்குள் ஏற்படும் பிரச்சனைகள், உறவுகளுக்குள் நல்லிணக்கம் ஏற்படுவதற்கும் வாஸ்து சாஸ்திரம் கைகொடுக்கிறது. அந்த வகையில் மாமியார் - மருமகள் உறவு சிறப்பாக இருப்பதற்கு வாஸ்து சாஸ்திரம் சொல்லும் பரிகாரத்தை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மாமியார் - மருமகள் என்பது அம்மா-மகள் உறவின் மறு வடிவம். இந்த உறவில் பாதிப்பு ஏற்படுகிறது என்றால் அதற்கு ராகுவும், சனியும் தான் முக்கிய காரணம். ஒருவரின் ஜாதகத்தில் நான்காம் வீடு தாய்க்கு உரியது இங்கு ராகு- சனி சேர்க்கை ஏற்படும் போது மாமியார் - மருமகள் பிரச்சனை ஏற்படும். இந்த பிரச்சனைகள் தீர கீழே சொல்லப்பட்டுள்ள வாஸ்து குறிப்புக்களை பின்பற்றலாம்.

 மாமியார் - மருமகள் உறவு பலப்பட வாஸ்து பரிகாரங்கள் :

  •  ஜாதகத்தில் மருமகளுக்கு உரிய 8 மற்றும் 10 ம் இடத்தில் உள்ள கிரகங்கள் பலமாக இருக்க கிரகங்களுக்குரிய பீஜ மந்திரத்தை தினமும் சொல்லி வரலாம்.

  •  உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை இல்லாதவர்களுக்கு தானமாக வழங்கலாம்.

  •  வீட்டின் வடகிழக்கு திசையில் விநாயகர் சிலை அல்லது ஏதாவது தெய்வத்தை பிரதிஷ்டை செய்து வழிபடலாம்.

  •  வீட்டை இருள் அடையாமலும், துர்நாற்றம் இல்லாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். இதெல்லாம் செய்யலாம் : வீட்டிற்குள் சிறிய மூங்கில் செடியை வைத்து வளர்க்கலாம்.

  •  மாமியார் - மருமகள், சமையல் அறையில் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணலாம்.

  •  வீட்டின் கூடத்தில் ஒரு அகன்ற மண் பாத்திரத்தில் சுத்தமான தண்ணீர் நிரப்பி, அதில் சில ரோஜாக்களை போட்டு வைக்கலாம்.

  • வீட்டில் மாமியார் - மருமகள் சண்டை, வாக்குவாதம் வராமல் இருக்க தினமும் சமைத்து முடித்ததும் முதலில் பசுமாட்டிற்கு அந்த உணவுடன் வெல்லம் கலந்து கொடுக்க வேண்டும்.
    images/content-image/1706343429.jpg

  • மருமகள் தனது கையால் தினமும் பறவைகளுக்கு அரிசியை உணவாக வழங்கலாம். எளிய வாஸ்து பரிகாரம் : தினமும் ஸ்ரீ ராமசரித்திரத்தை படிக்க வேண்டும்.

  •  மருமகள் தினசரி, கிருஷ்ணருக்கு துளசி இலைகளை சமர்ப்பித்து வழிபட வேண்டும்.

  • வியாழக்கிழமை தோறும் ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது நல்லது.

  •  மாமியார் - மருமகள் உறவு சிறப்பாக இருக்க நவகிரக வழிபாட்டினை முறையாக செய்து வரலாம்.

  •  மாமியார் எப்போதும் தெற்கு பக்கம் தலை வைத்து தூங்குவது நல்லது.

  •  மருமகள் தென் மேற்கு அல்லது கிழக்கு திசையில் தலை வைத்து தூங்குவது நல்லது. மனைவி எப்போதும் கணவனுக்கு இடது பக்கமாக தான் படுத்து உறங்க வேண்டும்.