சனத் நிஷாந்தவின் மெய்ப்பாது காவலருக்கு பதவி உயர்வுடன் நன்கொடை!
#SriLanka
#Death
#Accident
#Lanka4
#lanka4Media
#lanka4_news
#lanka4.com
PriyaRam
1 year ago
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் பாதுகாப்பாளராக கடமையாற்றி மரணித்த பொலிஸ் கான்ஸ்டபிள் அனுராதா ஜயக்கொடியின் குடும்பத்திற்கு 15 இலட்சம் ரூபா பதில் பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன் நன்கொடை வழங்கியுள்ளார்.
இதேவேளை, உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிள் சார்ஜன்டாகவும் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலரான பொலிஸ் கான்ஸ்டபிள் அனுராதா ஜயக்கொடி ஆகியோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.