சீனா G77 குழுவில் இணைவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!
#SriLanka
#Ranil wickremesinghe
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
G77 குழு மற்றும் சீனாவின் 03வது தெற்கு உச்சி மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரையாற்ற ஆரம்பித்துள்ளார்.
G77 மற்றும் சீனாவின் 03வது தெற்கு உச்சிமாநாடு உகாண்டாவின் கம்பாலாவில் நடைபெறுகிறது.
குறித்த மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி, உலகளாவிய தெற்கின் சவால்களை எதிர்கொள்ள சீனா G77 குழுவில் இணைவதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்த பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வை வழங்குவதற்கு இந்த குழுவின் ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பு போன்ற கோட்பாடுகள் முக்கியமானவை என ஜனாதிபதி அங்கு மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.