77 வளர்ந்து வரும் நாடுகளின் முன்னிலையில் உரையாற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!
#SriLanka
#Ranil wickremesinghe
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
77 வளரும் நாடுகள் மற்றும் சீனாவின் மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரையாற்ற உள்ளார்.
உகாண்டாவின் கம்பாலா நகரில் இன்று (21.01) இந்த மாநாடு நடைபெற உள்ளது. குறித்த 77 நாடுகளையும் ஐக்கிய நாடுகள் சபையில் வளரும் நாடுகளின் மிகப்பெரிய கூட்டணி என்று அழைக்கலாம்.
இந்த கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரையாற்றுவது புதிய முதலீட்டு வாய்ப்புகளை இலங்கைக்கு ஏற்படுத்தி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உகண்டா ஜனாதிபதி யோவேரி முசெவேனியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது கம்பாலா சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.