இலங்கை தமிழ் ஏதிலிகளை தடுத்து வைப்பதற்கு டியாகோ கார்சியா தீவு உகந்தது அல்ல!
#SriLanka
#UnitedKingdom
#island
#Lanka4
#Refugee
#lanka4Media
#lanka4_news
#lanka4.com
PriyaRam
1 year ago
இலங்கையின் தமிழ் ஏதிலிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் உள்ள டியாகோ கார்சியா தீவு, ஏதிலிகளை தடுத்து வைப்பதற்கு பொருத்தமான இடம் அல்ல என ஐக்கிய நாடுகளின் ஏதிலிகளுக்கான நிறுவனம் தெரிவித்துள்ளது.
டியாகோ கார்சியாவில், 56க்கும் அதிகமான இலங்கையின் புகலிடக் கோரிக்கையாளர்கள் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், குறித்த பகுதியில் ஏதிலிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறித்து ஐக்கிய நாடுகளின் ஏதிலிகளுக்கான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் பிரித்தானியாவின் புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில், நீண்டகால தீர்வு ஒன்றை தேடுவதாக பிரித்தானிய அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.