ரயிலில் மோதி 73 வயது முன்னாள் கிராம உத்தியோகத்தர் பலி
#Death
#Accident
#government
#Railway
#officer
#lanka4Media
#lanka4_news
#lanka4.com
#kalutara
Prasu
1 year ago
களுத்துறை - மக்கொன ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலில் மோதி முன்னாள் கிராம உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் மக்கொன பிரதேசத்தை சேர்ந்த 73 வயதுடையவராவார். அளுத்கமையில் இருந்து பொல்கஹவெல நோக்கி பயணித்த ரயிலில் மோதியே இவர் உயிரிழந்துள்ளார்.
காயமடைந்தவர் களுத்துறை நாகொடை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.