நாட்டின் சில பகுதிகளில் மழையுடன் கூடிய வானிலை நிலவும்!
#SriLanka
#Rain
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மத்திய, சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும். தீவின் மற்ற பகுதிகளில் முக்கியமாக மழை இல்லாத வானிலை உள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.