அரசாங்கத்திற்கு அத்தியாவசியமான வாகனங்களை மாத்திரம் இறக்குமதி செய்ய அனுமதி!
வாகன இறக்குமதிக்காக வெளியிடப்பட்டுள்ள புதிய வர்த்தமானி அரசாங்கத்திற்கு அத்தியாவசியமான சில வாகனங்களுக்கு மாத்திரமே வெளியிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், “பொதுவாக வாகனங்களை கொண்டு வரக்கூடாது என்பதற்காகவே வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
சில அரச நிறுவனங்களின் அத்தியாவசிய நடவடிக்கைகளுக்காக மாத்திரம் சில வாகனங்களை கொண்டு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் வெளிநாட்டு உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு அதே வெளிநாட்டு உதவியில் கிடைக்கும் பணத்தில் கொண்டு வரப்படுகிறது.
உதாரணத்திற்கு எடுத்துக்கொள்ளுங்கள். , கல்வி அமைச்சுக்கு இரண்டு பேருந்துகள், வெளிநாட்டு திட்டங்களின் கீழ் சுகாதார அமைச்சுக்கு 21 இரட்டை வண்டி வாகனங்கள், நடமாடும் மகப்பேறு மருத்துவ மனைகளுக்கு 03 வாகனங்கள், தொழிலாளர் அமைச்சுக்கு ஒரு வாகனம். அதுமட்டுமின்றி, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணிகள் இறங்குவதற்கு 03 வாகனங்கள் மட்டுமே உள்ளன.
இவை அரச நிறுவனங்களுக்கு அத்தியாவசியமானவை. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தவிர மற்ற அனைத்து வாகனங்களும் வெளிநாட்டு உதவி மூலம் கிடைத்த பணத்தை பயன்படுத்தி எடுக்கப்பட்டவை” எனத் தெரிவித்துள்ளார்.