நேபாளத்தில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானது : 12 பேர் பலி!
#SriLanka
#Accident
#Bus
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
#Nepal
Thamilini
1 year ago
நேபாளத்தின் டாங் மாவட்டத்தில் பேருந்து விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், 22 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பயணிகள் பேருந்து ஒன்று பாலத்தில் இருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விபத்தில் உயிரிழந்தவர்களில் இருவர் இந்திய பிரஜைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அந்நாட்டு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றன.