ஹரகட்டாவின் சகாக்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்!
#SriLanka
#Arrest
#Police
#Lanka4
#lanka4Media
#lanka4_news
#lanka4.com
PriyaRam
1 year ago
கைது செய்யப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினரான ஹரக் கட்டா என்ற நதுன் சிந்தக்கவின் 8 உதவியாளர்களும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை கைது செய்யப்பட்ட அவர்கள் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கொழும்பு குற்றவியல் விசாரணை பிரிவினரால் அத்துருகிரிய மற்றும் வெலிகம பகுதிகளில் முன்னெடுத்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது அவர்கள் கைதானதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
24 முதல் 43 வயதுக்கு இடைப்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.