கொழும்பின் பல பகுதிகளில் 16 மணித்தியால நீர்வெட்டு!
#SriLanka
#Colombo
#water
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
#lanka4Media
Thamilini
1 year ago
கொழும்பின் பல பகுதிகளுக்கு இன்று (13) நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு இன்று மாலை 05.00 மணி முதல் நாளை காலை 09.00 மணி வரை 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என அந்த சபை தெரிவித்துள்ளது.
அம்பத்தல நீர் விநியோகத்தின் அத்தியாவசிய பராமரிப்பு காரணமாக இந்த நீர்வெட்டு ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.