யாழ்ப்பாணம் - உரும்பிராய் பிரதேசத்தில் கேரள கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது!
#SriLanka
#Jaffna
#Arrest
#Police
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
யாழ்ப்பாணம் - உரும்பிராய் பிரதேசத்தில், 80 கிலோகிராம் அளவிலான கேரள கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாண இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய யாழ்ப்பாண பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைளின் போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.