சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேற முற்பட்ட சீன தம்பதியினர் கைது!
#SriLanka
#China
#Arrest
#Lanka4
#sri lanka tamil news
#Tamil News
#illegal
Thamilini
1 year ago
சட்டவிரோதமான முறையில் இரத்தினக் கற்களுடன் நாட்டை விட்டு வெளியேற முயற்சித்த சீன தம்பதியரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட தம்பதியிடம் இருந்து 175 ரத்தினக் கற்கள் கண்டுபிடிக்கப்பட்டன. குறித்த மாணிக்கக் கற்களின் பெறுமதி 50 மில்லியன் ரூபாவை அண்மித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாணிக்கக் கற்கள் மற்றும் கைது செய்யப்பட்ட சீன தம்பதிகள் மேலதிக விசாரணைகளுக்காக இலங்கை சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.