ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டு நான்கு நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்ட மூதாட்டி!
#SriLanka
#Earthquake
#Lanka4
#Japan
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டு 4 நாட்களுக்குப் பிறகு இடிபாடுகளுக்குள் சிக்கிய மூதாட்டியை நிவாரணப் பணியாளர்கள் காப்பாற்றியுள்ளனர்.
சுசுவில் இரண்டு மாடி கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கியிருந்த 90 வயது மூதாட்டி மீட்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜப்பானில் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 120 பேர் உயிரிழந்துள்ளதுடன் 200க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.
நிலநடுக்கம் ஏற்பட்டு 03 நாட்களுக்குப் பிறகு, 81 வயதான பெண்மணியும் நிவாரணப் பணியாளர்களால் மீட்கப்பட்டார்.



