மட்டக்களப்பில் புதிதாக திறந்து வைக்கப்பட்ட தபாலக கட்டிடம்!
#SriLanka
#Batticaloa
#Bandula Gunawardana
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
#news
Thamilini
1 year ago
மட்டக்களப்பு நகரில் 48 கோடி செலவில் தபாலக கட்டிட தொகுதியை அமைச்சர் பந்துல குணவர்தன திறந்து வைத்துள்ளார்.
கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிநேசன் மற்றும் சீ.யோகேஸ்வரன் ஆகியோரின் முயற்சியினால் கிழக்கு மாகாணத்தில் தபால் சேவை நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்தும் பொருட்டு இந்த மாகாண தபாலக கட்டிட தொகுதி அமைக்கப்பட்டது.

இந்த கட்டிடத் தொகுதியை இன்றைய (06.01) தினம் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தன திறந்து வைத்திருந்தார்.