ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் இந்துக்கள் முன்வைத்த முக்கிய வேண்டுகோள்கள்!

#SriLanka #Hindu #Ranil wickremesinghe #Lanka4 #Tamilnews #sri lanka tamil news #news
Thamilini
1 year ago
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம்  இந்துக்கள் முன்வைத்த முக்கிய வேண்டுகோள்கள்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம்  இந்துக்கள் நேரில் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதன்படி இலங்கை தமிழரசு கட்சி தலைவர்  மாவை சேனாதிராஜா மாவட்டபுரம் அருள்மிகு கந்தசாமி கோயில் தலைவர் குருக்கள் ஐயா சிவ பூமி அறக்கட்டளை தலைவர்  ஆறு திருமுருகன்,   சிவ சேனை தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் உள்ளிட்ட நூற்றுக்கும் கூடுதலானோர் கையொப்பமிட்ட வேண்டுகோளை இலங்கை இந்து அமைப்புகளின் ஒன்றியத் தலைவர்  சிவபால தேசிகர், செயலாளர் சிறீந்திரன் ஆகியோர் குடியரசுத் தலைவரிடம் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நேரில் கையளித்தனர்.

குறித்த கோரிக்கைளாவன, 

01. மத மாற்றத் தடைச் சட்டம் கொண்டு வருக 

02. பசுவதை தடைச் சட்டம் கொண்டு வருக   

03. இந்து சமயத்தை அரசியலமைப்பில் முன்னுரிமைச் சமயம் ஆக்குக ஆகிய மூன்று வேண்டுகோள்களை அவர்கள் முன்வைத்துள்ளனர். 

அத்துடன் குடியரசுத் தலைவராக ரணில் பொறுப்பேற்ற பின் இந்துக்களின் வேண்டுகோளை ஏற்று  ரணில் செய்த 10 நன்மைகளையும் பாராட்டி இருந்தனர்.  

இதன்படி,  உங்கள் ஆட்சிக் காலத்தில்  திருகோணமலையில் தொல்லியல் திணைக்களத்தாரின் புத்த மேலாதிக்க அடாவடித்தனத்தை நிறுத்துனீர்கள்.  

2 வெடுக்குநாறி மலையில் உடைந்த சைவத் திருவுருவங்களை மீண்டும் நிறுவ வழி செய்தீர்கள்.  

3 மதமாற்றி ஒருவர் மாவட்டச் செயலாளராக யாழ்ப்பாணம் வருவதைத் தடுத்தீர்கள்.  

4 மதமாற்றுவதற்கு வெளிநாடுகளில் இருந்து வருகின்ற மதம் மாற்றிகளை திருப்பி அனுப்பியும் தடுத்து நிறுத்தியும் நடவடிக்கை எடுத்தீர்கள்.  

5 போதகர் ஜெரோம் பெர்ணாந்து, இந்துக் கடவுளரைப் பழிக்கும்  சொற்களைச் கூறியமைக்காக இந்துக்களின் வேண்டுகோளை ஏற்றுச் சிறையில் அடைத்தீர்கள். 

 6 மன்னார் மாவட்டத்தில் சைவ சமயத்தவரை மாவட்டச் செயலாளர் ஆக்கினீர்கள். 

7 குடியரசுத் தலைவர் மாளிகையில் தீபாவளி நாள்களில் நந்திக் கொடியைப் பறக்க விட்டீர்கள். 

8 பௌத்த தீவிரராகப் பௌத்த சமயத்துக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கி, இந்து சமயத்திற்குப் பாதிப்புகளை ஏற்படுத்திய தொல்லியல் துறை ஆணையர் விலக வழி வகுத்தீர்கள். 

9 பகவத் கீதைக்கான உலக மாநாட்டையும் சமஸ்கிருத மொழிக்கான உலக மாநாட்டையும் இலங்கையில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்து வருகிறீர்கள். 

10 இந்து சமய வழிபடு பயணிகளுக்காகக் காங்கேயன்துறை நாகப்பட்டினம் கப்பல் சேவையை ஏற்றினீர்கள். 

இவ்வாறாக நீங்கள் ஆட்சிக்கு வந்த பின்பு இந்து சமயத்தவர் முன்பிருந்ததை விட மன உறுதியும் வலிமையும் உள்ளவர்களாக இருப்பதற்கு நடவடிக்கைகள் சில எடுத்துள்ளீர்கள்.  ஆனால்  அவை போதாது. மேலும் பல நடவடிக்கைகளை நீங்கள் எடுக்க வேண்டும்.  

இதனைத் தொடர்ந்து பின்வரும் மூன்று கோரிக்கைகளை முன்வைத்தனர் 

 1. இந்து சமயத்திற்கு அரசியலமைப்பில் முன்னுரிமை 

 2. மதமாற்றத் தடைச் சட்டம்

 3. பசுக் கொலைத் தடைச் சட்டம் இம் மூன்றையும் உங்களுடைய ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றி இலங்கையில் இந்துக்கள் பல்லாயிரம் ஆண்டுகளாகக் கடைப்பிடித்து வரும் வாழ்வியலையும் நன்நெறியையும் இடையூறின்றிக் பேணவும் போற்றவும் ஆவண செய்வீர்களாக என்று வலியுறுத்தியுள்ளனர். 

இந்த மூன்று கோரிக்கைகளுக்கும் செவி சாய்த்து உரிய நடவடிக்கை எடுப்பீர்களானால் இந்துக்களின் வாக்கு வங்கி ஆதரவை உங்களுக்காகப் பெற்று தருவோம் என மறவனபுலவு க. சச்சிதானந்தன் ரணில் விக்கிரமசிங்கவிடம்  நேரில் கூறினார்.  

இலங்கை சிவபூமி. இலங்கையின் ஆதிசமயம் சைவ சமயம். சைவர்களோடு சேர்ந்து பௌத்தர்களும், விஷ்ணுவை சிவனை உமையை கண்ணகியை கல்வி செல்வம் வெற்றிகான அம்மன்களை விநாயகரை, முருகனை வழிபடுகிறார்கள்.

 இந்துக்கள் இந்த நாட்டில் உரிமையோடு வாழ்வதைப் பௌத்த சமயத்தவரும் உறுதி செய்கிறார்கள். இலங்கை சிவ பூமி என்பதைப் பௌத்த சமயத்தவரும் உறுதி செய்கிறார்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வந்திருந்த அனைத்துச் சமயப் பேராளரிடமும் தெளிவாகக் எடுத்துரைத்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!