இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக சேனுகா திரேனி செனவிரத்ன நியமனம்!
#India
#SriLanka
#Ambassador
Mayoorikka
1 year ago
வெளிவிவகார அமைச்சின் முன்னாள் செயலாளரான திருமதி சேனுகா திரேனி செனவிரத்ன, இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் வெள்ளிக்கிழமை (5) தனது நற்சான்றிதழ்களை இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் ஒப்படைத்துள்ளார்.
இது தொடர்பாக இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு குறிப்பையும் பதிவிட்டிருந்தார்.
முன்னதாக, இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக மிலிந்த மொரகொட அந்தப் பதவியை வகித்தார்.
அவரது பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில், இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.