தட்டமைக்கான விசேட தடுப்பூசி வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பம்!
#SriLanka
#Lanka4
#Vaccine
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
அம்மை நோய்க்கான தடுப்பூசிகளை நான்கு மாவட்டங்களுக்கு வழங்கும் வேலைத்திட்டம் இன்று (06.01) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.
தட்டம்மைக்கான கூடுதல் அளவை வழங்க உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்த அவர், இந்த வேலைத்திட்டம் இரண்டு கட்டங்களாக அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் கூறினார்த.
இதேவேளை, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நாடளாவிய ரீதியில் ஒரு வார கால டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் நிஜித் சுமனசேன வலியுறுத்தியுள்ளார்.