இந்தோனேசியாவில் 2 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் பலி

#Death #Accident #Hospital #Indonesia #Train #Rescue #lanka4Media #lanka4.com
Prasu
2 years ago
இந்தோனேசியாவில் 2 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் பலி

இந்தோனேசியாவின் முக்கியமான தீவுகள் ஒன்றான ஜாவாவில் இன்று இரண்டு ரெயில்கள் மோதியதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

தலைநகரின் கிழக்கு மாகாணமான சுரபயாவில் இருந்து பாண்டுங் நோக்கி சென்ற ரெயில், சிகாலெங்காவில் இருந்து படாலராங் நோக்கி சென்ற பயணிகள் ரெயில் மீது பயங்கரமாக மோதியது.

இந்த ரெயில் விபத்து மேற்கு ஜாவாவின் பாண்டுங் நகரில் உள்ள சிகாலெங்கா ரெயில் நிலையத்தில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ளது.

 இந்த விபத்தில் பல பெட்டிகள் தடம் புரண்டன. இதில் குறைந்தது 3 பேர் உயிரிழந்த நிலையில், பலர் காயம் அடைந்துள்ளனர். மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4