கிளிநொச்சியில் புரட்சிகர கலைஞர் விஜயகாந்திற்கு நினைவஞ்சலி!
#SriLanka
#Kilinochchi
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
ஈழ மக்களை நேசித்த புரட்சிகர கலைஞரும், தே.மு.தி.கவின் மறைந்த தலைவருமாகிய விஜயகாந்த் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு இன்று (02.01) கிளிநொச்சியில் இடம்பெற்றது.
தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் கிளிநொச்சி kk மண்டபம் வைத்தியசாலை முன்பாக இடம்பெற்ற இந்நிகழ்வில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய குறித்த நிகழ்வில் பலர் கலந்துகொண்டு அவருடைய திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில் வேலவன்,அ.சத்தியானந்தன்,பாராளுமன்றஉறுப்பினர் சிவஞானம்சிறீதரன்ஆகியோர்
நினைவுரையாற்றினர்.
