தென்மேற்கு ரஷ்யாவில் வான்வழித் தாக்குதல் நடத்திய உக்ரைன் : 20 பேர் பலி!

#SriLanka #Ukraine #War #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
தென்மேற்கு ரஷ்யாவில் வான்வழித் தாக்குதல் நடத்திய உக்ரைன் : 20 பேர் பலி!

தென்மேற்கு ரஷ்யாவில் உக்ரைன் வான்வழித் தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.  

உக்ரைன் ஆக்கிரமிப்பிற்கு பின்னர் ரஷ்யா மீது நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதலாக இது கருதப்படுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

ரஷ்யாவின் பெல்கோரோட் பகுதியில் நடந்த தாக்குதலில் மூன்று குழந்தைகளும் கொல்லப்பட்டதாக ரஷ்யா கூறுகிறது. 

எவ்வாறாயினும், ரஷ்ய இராணுவ இலக்குகளை தாங்கள் தாக்கியதாக உக்ரைன் பாதுகாப்புப் படையினர் கூறுகின்றனர்.  

வெள்ளிக்கிழமை உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4