இந்து சமுத்திரத்தில் மேலும் நிலநடுக்கங்கள் பதிவாகக்கூடும் என எச்சரிக்கை!
#SriLanka
#Earthquake
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
இந்து சமுத்திரத்தின் ஆழ்கடல் பகுதியில் மேலும் நில அதிர்வுகள் ஏற்படக்கூடும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் முன்னாள் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இந்தியப் பெருங்கடலில் நேற்று (29.12) காலை இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன, அதில் ஒன்று ரிக்டர் அளவுகோலில் 4.8 அலகுகளாகவும், இரண்டாவது 5.8 அலகுகளாகவும் பதிவானது.
இந்நிலையில் இந்த நிலநடுக்கத்தினால் நாடு பாதிக்கப்படாது எனவும், இது தொடர்பில் தேவையற்ற அச்சம் தேவையில்லை எனவும் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.