வரிக் கோப்பினை திறப்பதை கட்டாயமாக்கும் தீர்மானம் பிற்போடப்பட்டுள்ளது : ரஞ்சித் சியம்பலாபிட்டிய!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் பல சந்தர்ப்பங்களில் வரிக் கோப்பினை திறப்பதை கட்டாயமாக்கும் தீர்மானம் பிற்போடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
முன்னதாக, வாகனப் பதிவு மற்றும் சொத்து வாங்குதல் போன்றவற்றில் வருமான உரிமம் பெறுவதற்கு ஜனவரி முதல் திகதியில் இருந்து வரிக் கோப்பைத் திறப்பது கட்டாயமாக்கப்படும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்திருந்தது.
எனினும், வரிக் கோப்புகளைத் திறக்கும் நடவடிக்கைக்கு பொதுமக்கள் பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், அதற்கு மேலும் கால அவகாசம் அளிக்கும் நோக்கில், சம்பந்தப்பட்ட முடிவை நடைமுறைப்படுத்துவதை சுமார் ஒரு மாத காலத்திற்கு ஒத்திவைக்க அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார்.