ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ள கருத்து!
#SriLanka
#Election
#Ranil wickremesinghe
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என தாம் எங்கும் கூறவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
ஆளும் கட்சி அமைச்சர்கள் குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், தாம் போட்டியிடப் போவதாகவோ, போட்டியிடப் போவதில்லை என்றோ, எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை எனக் கூறிய அவர், நாட்டின் பொருளாதாரத்தை மீட்பதற்காக பல பணிகளைச் செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு புதிய பொருளாதாரம் உருவாக்கப்பட வேண்டும் எனவும் அதற்கு கால அவகாசம் தேவைப்படும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.