மன்னாரில் நினைவு கூரப்பட்ட ஆழிப்பேரலை நினைவுநாள்!

#SriLanka #Mannar #Death #Lanka4 #tsunami #lanka4Media #lanka4_news #லங்கா4 ஊடகம் #lanka4.com
Mayoorikka
1 year ago
மன்னாரில் நினைவு கூரப்பட்ட ஆழிப்பேரலை நினைவுநாள்!

சுனாமி ஆழிப்பேரலையினால் உயிரிழந்தவர்களின் 19 வது ஆண்டு நினைவு நாள் இன்று (26) மன்னாரில் நினைவு கூரப்பட்டுள்ளது.

 மன்னார் மாவட்ட மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு ஏற்பாடு செய்த தேசிய பாதுகாப்பு தினத்தின் நினைவு நாள் இன்று செவ்வாய்க்கிழமை (26) காலை 9 மணியளவில் மன்னார் நகர பிரதேசச் செயலகத்தில் இடம்பெற்றது.

images/content-image/2023/12/1703571454.jpg

 இதன் போது மன்னார் பிரதேச செயலாளர் எம்.பிரதீப்,சர்வமத தலைவர்கள், திணைக்கள அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டு சுனாமி ஆழிப்பேரலையால் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து தீபம் ஏற்றி மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தினர்.

images/content-image/2023/12/1703571469.jpg

 நாட்டில் கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி ஏற்பட்ட இயற்கை ஆழிப்பேரலை அனர்த்ததினால் இலங்கையில் பல ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளனர். 

images/content-image/2023/12/1703571485.jpg

 சுனாமி அலையின் தாக்கம் தசாப்தங்கள் பல கடந்தும் அழியா நினைவுகள் கொண்டது. அந்த சுனாமி அலையில் சிக்கி எமது நாட்டின் பல்வேறு பிரதேசங்களையும் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான உயிர்கள் காவு கொள்ளப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

images/content-image/2023/12/1703571502.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!