இலங்கையில் கொரோனா தொற்றினால் ஒருவர் உயிரிழப்பு : வைத்தியர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை!

#Corona Virus #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
இலங்கையில் கொரோனா தொற்றினால் ஒருவர் உயிரிழப்பு : வைத்தியர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை!

இந்தியாவில் பரவி வருகின்ற J1 கொரோனா தொற்று இலங்கையில் பரவும் அபாயத்திற்கு மத்தியில்,  ஒருவர் உயிரிழந்துள்ளார். 

கம்பளை உலப்பனை பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

.இந்நிலையில்,  முதியவர்கள், பல்வேறு சிக்கல்கள் மற்றும் தொற்றாத நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் மற்றும் சுத்தமான காற்றோட்டம் இல்லாத நெரிசலான, மூடிய பகுதிகளில் வசிப்பவர்கள் மீண்டும் முகமூடிகளைப் பயன்படுத்துவது முக்கியம் என்று ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோய்த்தடுப்பு மருத்துவம் தெரிவித்துள்ளது.

அத்துடன், தொடர்ந்து அதிக காய்ச்சல், இருமல், வாசனை மற்றும் சுவை இழப்பு, சுவாசிப்பதில் சிரமம், சோர்வு, பசியின்மை மற்றும் வாந்தி ஆகியவை புதிய வகை கோவிட் நோயின் அறிகுறிகளாகும் என்றும், இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம் என்றும் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்தார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4