எல்1 புள்ளியில் ஜனவரி 6 இல் நுழையவுள்ள ஆதித்யா எல்1!

#India
PriyaRam
2 years ago
எல்1 புள்ளியில் ஜனவரி 6 இல் நுழையவுள்ள ஆதித்யா எல்1!

இந்தியாவின் முதல் சூரியப் பயணமான ஆதித்யா எல்1' விண்கலம், பூமியிலிருந்து 1.5 மில்லியன் கிலோமீற்றர் தொலைவில் உள்ள எல்.1 என்ற லாக்ராஞ்சியன் புள்ளியை ஜனவரி 6-ஆம் திகதி அடையும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் எஸ்.சோம்நாத் தெரிவித்துள்ளார்.

சூரியனை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பிய முதல் விண்கலம் ஆதித்யா எல்-1 என்பதால் அது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்து வருக்கின்றது.

images/content-image/2023/12/1703322272.jpg

சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலம் குறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் விளக்கமளித்துள்ளார்.

இந்த விண்கலம் செப்டம்பர் 2 ஆம் திகதியன்று ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இஸ்ரோவால் ஏவப்பட்டது.

இந்தநிலையில் ஆதித்யா எல்1 ஜனவரி 6 ஆம் திகதியன்று எல்1 புள்ளியில் நுழையும் என்று சோமநாத் தெரிவித்துள்ளார்.

ஆதித்யா எல்1 அதன் இலக்கை அடைந்தவுடன், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு சூரியனில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகளை அளவிட உதவும் என்று சோம்நாத் குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4