ரணில் விக்கிரமசிங்கவிற்கும் அமெரிக்க ஜனாதிபதியின் பிரதிநிதி ஜோன் கெரிக்கும் இடையில் சந்திப்பு!
#SriLanka
#Ranil wickremesinghe
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் காலநிலை மாற்றம் தொடர்பான அமெரிக்க ஜனாதிபதியின் பிரதிநிதி ஜோன் கெரிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
டுபாயில் இடம்பெற்ற COP 28 மாநாட்டின் போது இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் காலநிலை மாற்றம் தொடர்பான உத்தேச சர்வதேச பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகள், காலநிலை மாற்ற திட்டங்களுக்கு நிதியளிப்பதில் தனியார் துறையை ஈடுபடுத்துவதன் முக்கியத்துவம் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.