சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் விபத்து : 11 பேர் பலி!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

வடகிழக்கு சீனாவின் ஹெய்லாங்ஜியாங் மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் இன்று (28.11) ஏற்பட்ட விபத்தில் குறைந்தது 11 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரஷ்ய எல்லையில் இருந்து சுமார் 130 கிலோமீட்டர் (80 மைல்) தொலைவில் உள்ள சுரங்கத்திலேயே குறித்த விபத்து நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.



