இன்றைய வானிலை முன்னறிவிப்பு!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
நாடளாவிய ரீதியில் இன்று (22.11) மழை நிலைமை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி மத்திய, சப்ரகமுவ, மேற்கு, வடமேற்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ வரை பலத்த மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழை, தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.