தரமற்ற இம்யூனோகுளோபின் - அதிரடியாக கைது செய்யப்பட்ட அதிகாரிகள்!
#SriLanka
#Arrest
#Police
#Medicine
PriyaRam
2 years ago
தரமற்ற இம்யூனோகுளோபுலினை கொள்வனவு செய்தமை தொடர்பாக சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவின் மூத்த அதிகாரிகள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மருத்துவ வழங்கல் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் கபில விக்கிரமநாயக்க, உதவிப் பணிப்பாளர் உள்ளிட்ட நால்வரே கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் சற்றுமுன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ அறிவித்துள்ளார்.