சீனியை பதுக்கி வைத்திருப்போருக்கு எச்சரிக்கை!
#SriLanka
#sugar
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
சீனியை பதுக்கி வைத்துள்ள அனைத்து களஞ்சியசாலைகளுக்கும் சீல் வைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
குருநாகல் பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், சந்தையில் கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு சீனி விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.