ரெய்க்ஜான்ஸ் தீபகற்பத்தில் தொடர்ச்சியாக நிலநடுக்கங்கள் பதிவு : மக்கள் பலர் வெளியேற்றம்!
#SriLanka
#world_news
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
ஐஸ்லாந்தின் தென்மேற்கு ரெய்க்ஜான்ஸ் தீபகற்பத்தில் தொடர்ந்து பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து, அப்பகுதியில் எரிமலை வெடிக்கும் அபாயம் அதிகம் உள்ளதால் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
Grindavik என்ற பாதிப்புக்குள்ளான கிராமத்தில் இருந்து சுமார் 4,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த கிராமத்தில் இருந்து கிட்டத்தட்ட இரண்டு மைல் தொலைவில் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 1,400 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.