காற்றில் பறக்கவிடப்பட்ட வாக்குறுதிகள் : கேள்விக்குறியாகும் பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கை!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்தம் ஆயிரம் ரூபா வழங்குவதாக வழங்கிய வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தமது வேலைகளை விட்டு வெளியேறினால் நாட்டின் பொருளாதாரம் மேலும் பாதிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
நாளாந்தம் ஆயிரம் ரூபா கோரி தோட்டத் தொழிலாளர்கள் போராட்டம் ஆரம்பித்து நீண்ட நாட்கள் கடந்துவிட்ட நிலையில், அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படமால் கிடைப்பில் போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.