அமெரிக்காவில் இந்திய மாணவர் மீது கத்திக்குத்து தாக்குதல்

#Student #Hospital #America #Attack #Rescue #Knife #Indian
Prasu
2 years ago
அமெரிக்காவில் இந்திய மாணவர் மீது கத்திக்குத்து தாக்குதல்

இந்தியாவை சேர்ந்த வருண் (வயது24) என்பவர் அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார்.

இந்த நிலையில் அங்குள்ள வால்பரய்சோ நகரில் உள்ள பொது உடற்பயிற்சி கூடத்தில் மாணவர் வருண் மீது வாலிபர் ஒருவர் கத்திக்குத்து தாக்குதல் நடத்தினார். 

வருணை கத்தியால் தலை உள்ளிட்ட இடங்களில் சரமாரி குத்தினார். இதில் வருண் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து வந்து தாக்குதல் நடத்திய நபரை பிடித்து கைது செய்தனர். 

படுகாயம் அடைந்த வருணை மீட்டு போர்ட் வெய்ன் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

ஆனால் வருணின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர் உயிர் பிழைப்பதற்கு பூஜ்ஜியத்திலிருந்து 5 சதவீதம் வரை தான் வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளன.

இதற்கிடையே கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபர் ஜோர்டான் ஆண்ட்ராட் (24) என்பது தெரிய வந்தது. அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் போலீசாரிடம் கூறும்போது, உடற்பயிற்சி கூடத்தில் தெரியாத நபர் மசாஜ் செய்ய கூறினார்.

இதனால் சற்று வினோதமாக உணர்ந்தேன். எனக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தீர்மானித்து நான் அதை தடுப்பதற்கான செயலில் ஈடுபட்டேன் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4