வவுனியாவில் நடந்துச் சென்றவர் மீது மோதிய வேன் : இளம் குடும்பஸ்தருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
வவுனியாவில் நடந்துச் சென்றவர் மீது மோதிய வேன் : இளம் குடும்பஸ்தருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!

வவுனியா மன்னார் வீதி பிரதேச செயலகத்திற்கு முற்பகுதியில் உள்ள பாதசாரி கடவையில் ஏற்பட்ட விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொதுவைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்து நேற்று (29.10) இரவு வவுனியா மன்னார் வீதி வவுனியா பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பாதைசாரி கடவை பகுதியில்  இடம்பெற்றுள்ளது. 

முல்லைத்தீவு மின்சார சபையில் பணி புரியும் ஊழியர் ஒருவர் குருமன்காடு கலைமகள் மைதானத்திற்கு அருகில் உள்ள வீட்டிலிருந்து தனது பணி நிமித்தம் முல்லைத்தீவு செல்வதற்காக பேருந்து நிலையம் நோக்கி நடந்து செல்கையில் அதே திசையில் பயணித்த வேன் ஒன்று வேகக்கட்டுப்பட்டை இழந்து நடந்து சென்றவருடன் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

வவுனியா மன்னார் வீதி கலைமகள் மைதானத்திற்கருகில் தற்காலிகமாக வசித்து வந்த மூன்று பிள்ளைகளின் தந்தையாரான 48 வயதுடைய குடும்பஸ்தரே விபத்தில் படுகாயமடைந்துள்ளார். 

இந்நிலையில் குறித்த வேனின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரனைகளை வவுனியா பொலிஸ்நிலைய போக்குவரத்துப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!