மதுபோதையில் வாகனத்தை செலுத்திய முன்னாள் பொலிஸ் அதிகாரி கைது
#SriLanka
#Arrest
#Police
#Alcohol
#drink
#officer
#Driver
Prasu
1 year ago

மது போதையில் வாகனத்தை செலுத்தி ஏனைய வாகனங்களுடன் மோதி சேதத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று இரவு வெள்ளவத்தை, மெரீன் டிரைவ் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வெள்ளவத்தை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்னவை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



