நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 28 பேர் மரணம்
#Death
#Accident
#Hospital
#world_news
#Lanka4
#fire
#Rescue
#Mine
#Kazakhstan
Prasu
1 year ago

கசகஸ்தானில் உள்ள இரும்புத் தொழிற்சாலை ஒன்றுக்குச் சொந்தமான நிலக்கரி சுரங்கத்தில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் 28 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், 18 பேர் காணாமல் போயுள்ளதாக அந்த நாட்டு அவசரகால சூழ்நிலைகளுக்கான அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த சுரங்கத்தில் 252 பேர் பணிபுரிந்து வந்த நிலையில் விபத்து ஏற்பட்டதை அடுத்து 206 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.



