கண்ணீர் புகைக்குண்டு தாக்குதல் நடத்தியதை ஆசிரியர்கள் பிரச்சினையாக்க வேண்டாம் - பொலிஸார் கோரிக்கை!
#SriLanka
#Police
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

அண்மையில் கொழும்பில் ஆசிரியர் அதிபர்கள் சங்கத்தினால் நடாத்தப்பட்ட போராட்டத்தில் 4000 லீற்றர் நீர் மாத்திரமே பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த கால நீர்த்தாக்குதல்களுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவு எனவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதிபர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டு தாக்குதல் நடத்தியதை ஆசிரியர்கள் பிரச்சினையாக்க வேண்டாம் எனவும் பொலிஸ் பொது முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த 24ஆம் திகதி பத்தரமுல்லை பெலவத்தையில் நடைபெற்ற அதிபர், ஆசிரியர் சங்கத்தின் ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டமை தொடர்பிலான விசாரணையின்போதே பொலிஸார் மேற்படி கூறியுள்ளனர்.



