ஸ்பெயினில் மதகுருமார்களால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான 200,000க்கும் மேற்பட்ட குழந்தை
#Arrest
#Women
#Sexual Abuse
#Church
#Spain
#Preist
Prasu
1 year ago

ஸ்பெயினின் மதகுருமார்கள் 200,000க்கும் மேற்பட்ட குழந்தைகளை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது ஒரு சுயாதீன ஆணையம் ஒன்று வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது
1940 ஆம் ஆண்டு முதல் ஸ்பெயினில் ரோமன் கத்தோலிக்க மதகுருக்களால் 200,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது அறிக்கை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையைக் கொடுக்கவில்லை,
ஆனால் 8,000 க்கும் அதிகமான மக்கள் நடத்திய கருத்துக் கணிப்பில் மதிப்பிடப்பட்டுள்ளது
ஸ்பெயினின் வயது வந்த 39 மில்லியன் மக்கள் தொகையில் 0.6 சதவீதம் பேர் தாங்கள் குழந்தைகளாக இருந்தபோது மதகுருமார்களால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளானதாகக் கூறியுள்ளனர்.



