ஹமூன் புயல் வங்கதேசம் அருகே கரையை கடந்ததாக வானிலை ஆய்வு மையம் தகவல்

#India #HeavyRain #2023 #Breakingnews #ImportantNews #Cyclone
Mani
2 years ago
ஹமூன் புயல் வங்கதேசம் அருகே கரையை கடந்ததாக வானிலை ஆய்வு மையம் தகவல்

மத்திய கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. இந்த புயலானது நேற்று அதிதீவிர புயலாக மாறி பின்னர் மிகத்தீவிர புயலாக மாறியது.

இந்த புயல் இன்று தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வங்கதேசத்தில் கெபுரா - சிட்டகாங் இடையே கரையை கடக்கும் என நேற்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தீவிர புயலாக இருந்த 'ஹமூன்' புயலாக வலுவிழந்து வங்கதேசம் அருகே கரையை கடந்தது. இது அடுத்த 6 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4