அரசாங்கத்தின் மேலும் சில நிறுவனங்களை மறுசீரமைப்பதற்கு தீர்மானம்!

#SriLanka #government #Department
Mayoorikka
1 year ago
அரசாங்கத்தின் மேலும் சில நிறுவனங்களை மறுசீரமைப்பதற்கு தீர்மானம்!

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களை மறுசீரமைப்பதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்வதற்கான யோசனையை அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

 இது தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுப்பதற்கு பிரதமர் தினேஸ் குணவர்தன தலைமையில் குழுவொன்றை நியமிக்குமாறு உரிய தீர்மானம் கோருவதாக அமைச்சர் கூறுகிறார்.

 பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் பாராளுமன்றத்தில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார். நஷ்டத்தில் இயங்கும் அரசு நிறுவனங்களை கலைக்க அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. 

அத்தகைய நிறுவனங்களை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்காக, நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசியக் கொள்கை அமைச்சினால் பொதுச் செலவின மீளாய்வுக் குழு நியமிக்கப்பட்டது.

 நகர்ப்புற குடியிருப்புகள் அபிவிருத்தி அதிகாரசபை, கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வள முகாமைத்துவத் திணைக்களம், பொறியியல் கூட்டுத்தாபனம், தேசிய இயந்திரவியல் நிறுவனம், கட்டிடப் பொருட்கள் கூட்டுத்தாபனம், கண்ணிவெடி அகற்றல் மையம், ஹோட்டல் டெவலப்பர்ஸ் (லங்கா) நிறுவனம் லிமிடெட், ஓஷன் வியூ டெவலப்மென்ட் ஆகியவற்றின் கலைக்கபப்ட்டுள்ளது. இவற்றில் அரச பொறியியல் கூட்டுத்தாபனம் ஏற்கனவே நிதி அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

 நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, நகர்ப்புற குடியேற்ற அபிவிருத்தி அதிகார சபையை கலைப்பது குற்றமாகும் என இது தொடர்பான கலந்துரையாடலில் சுட்டிக்காட்டினார்.

 பொதுச் செலவுக் குழு மீளாய்வுக் குழுவின் தொடர்புடைய குழுவின் 14 முன்மொழிவுகளின் கீழ் தயாரிக்கப்பட்ட அறிக்கை நிதியமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

 இந்த அறிக்கையை தயாரிக்கும் போது குழுவானது சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் கருத்துக்களைப் பெறவில்லை எனவும், இது தொடர்பில் தனக்கும், விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் இராஜாங்க அமைச்சர்களுக்கும் அறிவிக்கப்படவில்லை எனவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

 குறித்த குழுவின் பரிந்துரைகளை அமைச்சு ஏற்றுக் கொள்ளாத காரணத்தினால் இந்த முடிவை மீளாய்வு செய்யுமாறு அமைச்சரவையையும் நிதி அமைச்சையும் கோருவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!