எரிசக்தி நெருக்கடிக்கு மஹிந்த ராஜபக்ச மட்டுமே தீர்வை வழங்கினார்: சாகர புகழாரம்

#SriLanka #Mahinda Rajapaksa #Power
Mayoorikka
1 year ago
எரிசக்தி நெருக்கடிக்கு மஹிந்த  ராஜபக்ச மட்டுமே தீர்வை வழங்கினார்: சாகர புகழாரம்

மஹிந்த அரசாங்கத்தின் மின் உற்பத்தித் திட்டம் இன்மையால் இன்று நாட்டின் மின்சாரக் கட்டணம் அதிகரித்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

 மகிந்த ராஜபக்ச மட்டுமே உற்பத்தித் திட்டத்துடன் செயற்பட்டதாகவும், மேல் கொத்மலை, நுரைச்சோலை, உமா ஓயா போன்ற பாரிய திட்டங்களை உருவாக்கி குறைந்த விலையில் நாட்டுக்கு மின்சாரம் வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 நுரைச்சோலை அனல்மின் நிலையம் இதுவரை கிடைக்காமல் போயிருந்தால், டீசல் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்தும் அதே தேவையைப் பெற வேண்டியதன் காரணமாக நெருக்கடி இன்னும் மோசமாகியிருக்கும் என்றும் அவர் கூறுகிறார்.

 நாட்டின் எரிசக்தி நெருக்கடிக்கு மஹிந்த ராஜபக்ச மட்டுமே தீர்வை வழங்கினார் என்றும் எந்த தலைவரும் தீர்வை வழங்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!